பிரதேச சபை தலைவரை பெண் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதேச சபை தலைவரை பெண் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை!

கேகாலை, தெரனியகல பிரதேச சபை தலைவரை பெண் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த தெரனியகல பிரதேச சபை தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெரனியகல சந்தைக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தெரனியகல பிரதேச சபை தலைவர் பயணித்த வாகனம் கடை ஒன்றிற்கு அருகில் நிறுத்திய போது அவருக்கு நெருக்கமான ஆதரவாளரான பெண் ஒருவர் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

இருவருக்கு ஏற்பட்ட கலந்துரையாடலின் போது திடீரென பெண் கத்தியை எடுத்து பெண் குறித்த பிரதேச சபை தலைவரை தாக்கியுள்ளார். மூக்கில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.