தடுப்பூசி செலுத்தப்படும் இடத்தில் பல்கலைகழக மாணவர்களினால் பதற்ற சூழ்நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி செலுத்தப்படும் இடத்தில் பல்கலைகழக மாணவர்களினால் பதற்ற சூழ்நிலை!

இன்று காலை கொரொனா தடுப்பூசி செலுத்தப்படும் நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனையில் பரபரப்பு நிலை ஒன்று ஏற்பட்டது.

மொடர்னா தடுப்பூசியைக் கேட்டு, தடுப்பூசி பெற அங்கு வந்த பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மொடர்னா தடுப்பூசியானது, குறித்த மையத்தில் கொடுக்கப்படமாட்டாது என்று ஒரு இராணுவ அதிகாரி கூறிய போதும், இராணுவ மருத்துவமனையில் மொடர்னா தடுப்பூசி வழங்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் எழுத்துப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் மையத்திற்கு வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மாத்திரமே மொடர்னா தடுப்பூசி வழங்கப்பட்டதாக இராணுவ அதிகாரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.