
மொடர்னா தடுப்பூசியைக் கேட்டு, தடுப்பூசி பெற அங்கு வந்த பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மொடர்னா தடுப்பூசியானது, குறித்த மையத்தில் கொடுக்கப்படமாட்டாது என்று ஒரு இராணுவ அதிகாரி கூறிய போதும், இராணுவ மருத்துவமனையில் மொடர்னா தடுப்பூசி வழங்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் எழுத்துப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் மையத்திற்கு வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மாத்திரமே மொடர்னா தடுப்பூசி வழங்கப்பட்டதாக இராணுவ அதிகாரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டது. (யாழ் நியூஸ்)