சுகாதார நிறுவனத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று அறிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.
அடுத்த வாரம் முதக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்மறையான முடிவின் (தொற்று இல்லை என்றதும்) பின்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கை பயணிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் விளக்கினார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் கூறுகையில், பயணிகளினால் ஏற்கப்பட்ட செலவு மற்றும் பிசிஆர் முடிவு கிடைக்கும் வரை ஹோட்டலில்களில் காத்திருக்கும் நேரம் இந்த நடவடிக்கையால் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதனை மேற்கொள்ள தனக்கு உதவி செய்ததற்காக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு மண்டல மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் டிவி சானக ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
உள்ளூர் ஊடகங்கள் சமீபத்தில் இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மோசடியை வெளிப்படுத்தியதை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறான செயல்கள் இக்காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்களை பாரியளவு பாதித்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீட்டில் பிசிஆர் சோதனை நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம், விமான நிலையத்திற்கு வரும் இலங்கை பயணிகள், தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களுக்கு அனுப்பப்படாமல், பிசிஆர் சோதனைகளுக்குப் பிறகு சில மணிநேரங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள். (யாழ் நியூஸ்)