படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க தீர்மானம்!

இலங்கையின் தற்போதைய அரச அதிபரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஸவை விமர்சித்து வந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் (Lasantha Wickramasinghe )படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவி, அதனூடாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் நீதிமன்றம் ஒன்றை நிறுவி, 2009 ஆண்டில் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் 3 முன்னணி அமைப்புக்கள் ஒன்றிணைந்து, ஊடகவியலாளர்களின் படுகொலை வழக்குகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவும் அதனுடன் தொடர்புடைய அரசாங்கங்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்காகவும் 'மக்கள் தீர்ப்பாயத்தை' நிறுவியுள்ளன.

அதன்படி வரையறுக்கப்படாத சுதந்திர ஊடகம் (Free Press Unlimited), எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (Committee to Protect Journalists) ஆகிய மூன்று சர்வதேச அமைப்புக்கள் இணைந்து 'ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்' என்ற கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.