“மெனிக்கே மகே ஹித்தே” யொஹானிக்கு பல வாய்ப்புக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“மெனிக்கே மகே ஹித்தே” யொஹானிக்கு பல வாய்ப்புக்கள்!

“மெனிக்கே மகே ஹித்தே” பாடல் மூலம், உலகப் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

எதிர்வரும் 30, முதல் ஒக்டோபர் 03 ஆம் திகதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

புதுடெல்லிக்கருகிலுள்ள, ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ‘ஸ்டூடியோ எக்ஸ்ஓ’ அரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதியும்

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரிலுள்ள ‘ ஹார்ட் கப் கொஃபி’ அரங்கில் ஒக்டோபர் 03 ஆம் திகதியும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் யொஹானி பங்குபற்றவுள்ள இசை நிகழ்ச்சிக்கு ‘ Supermoon #NowTrending’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் யொஹானியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது குறித்து டுவிட்டரில் யொஹானி தெரிவிக்கையில்,

‘இந்தியாவில் பாட வேண்டுமென நான் எப்போதும் விரும்பியிருந்தேன். இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு கிடைத்த அதிஸ்டம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் தினம் தினம் புதிய மைல்கல்லை எட்டுவதுடன், இந்த பாடல் மூலம் இளம் பாடகி யொஹானியின் வாழ்க்கையும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.