இன்று முதல் அறிமுகமாகும் புதிய திட்டம் - இராணுவ தளபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் அறிமுகமாகும் புதிய திட்டம் - இராணுவ தளபதி!

தென் மாகாணத்தில் இன்று (02) முதல் கொவிட் தொற்று உள்ளவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் களுக்கு ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவை மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த சேவையைப் பெற கொவிட் பாதிக்கப்பட்ட நபரின் பின்வரும் தகவலை உள்ளிட்டு 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அதற்கமைய, கொவிட் தொற்றாளர்கள் பின்வரும் பிரச்சினைகள் தொடர்பில் அதன் குறியீட்டை இடுவதன் மூலம் குறுஞ் செய்தியினை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

A-சுவாசிப்பதில் சிக்கல் நிலை

B-காய்ச்சல் நிலை

C-எவ்வித அறிகுறியும் இல்லை

உதாரணமாக: காய்ச்சல் நிலை B<இடைவெளி>வயது<இடைவெளி>தே.அ.அ.<இடைவெளி>முகவரி என குறிப்பிட்டு, 1904 இற்கு குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும்.

றுஞ்செய்தி மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால், உரிய சிகிச்சை நிலையத்திற்கு நோயாளியை அனுப்புவதற்கான வைத்தியர் குழாம் அனுப்பி வைக்கப்படும்.

இதற்காக அம்பியூலன்ஸ் வண்டி சேவை உள்ளிட்ட ஏனைய சிகிச்சை வசதிகளும் வழங்கப்படும். வீட்டில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கு, வைத்தியர் குழுவொன்று 1390 எனும் அதற்கான பிரத்தியேக இலக்கத்தின் மூலம், தொலைபேசி அழைப்பின் ஊடாக தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு உரிய சேவை வழங்கப்படுமென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.