இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உயிர்குமிழி முறைமைகளின் கீழ் மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.
மஹேல ஜயவர்தன தற்போது, மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஓமானில் இடம்பெறவுள்ள T20 உலக்கிண்ணப் போட்டியின் முதலாம் சுற்றுப்போட்டிகளில் மாத்திரம், மஹேல ஜயவர்தன இந்த பதவியை வகிப்பார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.