இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம் பெற்ற மஹேல!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம் பெற்ற மஹேல!

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கமைய, T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உயிர்குமிழி முறைமைகளின் கீழ் மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.


மஹேல ஜயவர்தன தற்போது, மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.


இந்நிலையில், ஓமானில் இடம்பெறவுள்ள T20 உலக்கிண்ணப் போட்டியின் முதலாம் சுற்றுப்போட்டிகளில் மாத்திரம், மஹேல ஜயவர்தன இந்த பதவியை வகிப்பார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.