மேலும் வீழ்ச்சியடைந்த கொரோனா பரவல் - மேலும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் வீழ்ச்சியடைந்த கொரோனா பரவல் - மேலும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கு மேலதிகமாக மேலும் 400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் நாளை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று 941 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28) 61 கோவிட் இறப்புகள் பதிவானதாக  சுகாதார சேவைகள் இயக்குனர் அறிவித்தார்.

 இதனடிப்படையில் இலங்கையில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 12,847 ஆக உயர்வடைந்தது.

மேலும், 172 கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று இலங்கை முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

 மொபைல் தடுப்பூசி பிரிவுகளும் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டும் வருகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.