அந்நிய செலாவணியை அதிகரிக்க இலங்கை அறிமுகப்படுத்தும் புதிய விசா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அந்நிய செலாவணியை அதிகரிக்க இலங்கை அறிமுகப்படுத்தும் புதிய விசா!


சுற்றுலா துறையை மேம்படுத்தவும், அந்நிய செலாவணியை நாட்டிற்கு ஊக்குவிக்கவும் டிஜிட்டல் நாடோடி விசா முறையை அறிமுகப்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவிக்கையில், டிஜிட்டல் நாடோடி அமைப்பு, வெளிநாட்டவர்களை இலங்கைக்கு வந்து தங்கள் வெளிநாட்டு வேலைகளை தொலைவேலை அடிப்படையில் தொடர உதவும்.


"இந்த அமைப்பின் விசா கொடுப்பனவுகள் மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் நாட்டின் வருமானம் பெருகும், அமைச்சரவை அமைச்சர்கள் ஏற்கனவே இந்த முன்மொழிவை அனுமதித்துள்ளனர்" என தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.


செல்வாக்கு மிக்க பிரெஞ்சு பயண மற்றும் சுற்றுலா ஆபரேட்டர் கிளப் மெட் (French travel and tourism operator Club Med.) மூலம் 2021 ஆம் ஆண்டில் டிஜிட்டல் நாடோடிகளுக்கு இலங்கை இரண்டாவது சிறந்த இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.