உண்மையில் கெரலவப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வெளி நாடொன்றுக்கு விற்கப்பட்டதா? வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உண்மையில் கெரலவப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வெளி நாடொன்றுக்கு விற்கப்பட்டதா? வெளியான தகவல்!

கெரவலப்பிட்டிய “யுகதனவி” மின் உற்பத்தி நிலையம் எவருக்கும் விற்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, மின் நிலையத்தின் ஒரு பகுதி சார்பாக முதலீடு தொடர்பான திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சியால் இந்த வணிகம் நடத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், தனக்கு தெரிந்தவரை இது விற்கப்படவில்லை என மேலும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வணிகத்தின் ஒரு பகுதி மட்டுமே முத்லீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது 100% அரசுக்குச் சொந்தமானது என்றும் நிதி அமைச்சுக்குச் சொந்தமான 50% இல் 40% இந்த முதலீட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.