நியூஸிலாந்து தாக்குதல் சம்பவம்; இலங்கை அரசு கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் அவ்வரசிடம் முன்வைத்த கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நியூஸிலாந்து தாக்குதல் சம்பவம்; இலங்கை அரசு கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் அவ்வரசிடம் முன்வைத்த கோரிக்கை!


நியூஸிலாந்தின் - ஒக்லாண்டில் சூப்பர் மார்க்கெட்  ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் கோரியுள்ளது.


இலங்கை தூதுவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


நியூஸிலாந்தின் - ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் அங்குள்ள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


வெளிநாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.


குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதலானது, பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.


குறித்த இலங்கையர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடையாளம் காணப்படாத குறித்த நபர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.