நாட்டு மக்களுக்கான மீண்டுமொரு அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கான மீண்டுமொரு அதிர்ச்சித் தகவல்!

கடந்த மாதமே விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரிப்பை கோரியுள்ளது லாப்ஸ் நிறுவனம்.

கடந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 363 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட காஸ் சிலிண்டரின் விலையை 291 ரூபாவில் அதிகரிக்க வேண்டும் என லாப்ஸ் நிறுவனம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாப்ஸ் சிலிண்டரின் புதிய விலையாக 2147 ரூபா காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே நாட்டில் பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் சில பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.