கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தொடர்பிலான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தொடர்பிலான செய்தி!

இரண்டாவது சினோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், அஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது அவசியம் என்று விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 20 - 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவது முறையற்றதெனவும் அது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் செயற்பாடு என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்கள் அதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர்கள் குழு, உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் அனுமதியுடன் முன்வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியமாகும் என்றும் மேற்படி சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேற்படி செயற்பாடுகள் தொடர்பான அறிவை கொண்டுள்ள மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முறையாக செயல்படுத்தாமையே 60 வயதுக்கு மேற்பட்டோரிடையே அதிகளவில் மரணம் ஏற்படுவதற்குக் காரணம் என்றும் அந்த சங்கம் தெரிவிக்கின்றது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.