க.பொ.த உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளுகள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளுகள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

க.பொ.த உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லையை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லையினை நீடிப்பது தொடர்பில் இன்று தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைகளுக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அதிபர்களுக்கு இன்று வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்நியைிலேயே மேலும் ஓரிரு வாரங்கள் நீடிக்கும் படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.