ஹோம் வர்க் செய்யவில்லை; தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவர் மரணம்; தந்தை கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹோம் வர்க் செய்யவில்லை; தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவர் மரணம்; தந்தை கைது!


தும்புத்தடியால் தாக்கப்பட்டமையால் மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் காலி பிரதான நீதிவான் முன்னிலையில் இன்று (30) பிரசன்னப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி - மஹமோதர பகுதியில் 16 வயதான குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

வீட்டில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணித்து தந்தையால் நேற்று பிற்பகல் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மயக்கமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.