பால்மா விலை அதிகரிப்பு போதாது என்கிறது இறக்குமதியாளர்கள் சங்கம்! மேலும் 150 ரூபாய் அதிகரிக்க எதிர்பார்ப்பு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால்மா விலை அதிகரிப்பு போதாது என்கிறது இறக்குமதியாளர்கள் சங்கம்! மேலும் 150 ரூபாய் அதிகரிக்க எதிர்பார்ப்பு?


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டாலும் தங்களுக்கு ஒரு கிலோ கிராம் பால்மாவுக்கு 150 ரூபா நட்டம் ஏற்படும் என இலங்கை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எமது செய்தி சேவைக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது சர்வதேச சந்தையில் ஒரு கிலோ கிராம் பால்மா 4.10 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது. இது 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.


அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.


இந்தநிலையில் 350 ரூபாவினால் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, சுங்கப் பிரிவினரால் பொருட்களை விடுவிக்கும் நடவடிக்கை வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.