10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞர் கைது!


மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி அவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று அங்க பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழ்ந்துவரும் குறித்த சிறுமியை சம்பவ தினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை பலாத்தகாரம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த 21 வயது இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதில் கைது செய்தவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-சரவணன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.