நாட்டின் கொரோனா பரவல் தொடர்பில் வெளியான திடுக்கிடும் அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் கொரோனா பரவல் தொடர்பில் வெளியான திடுக்கிடும் அறிக்கை!

நாட்டில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களை விட ஐந்து மடங்கு அதிகமான மக்கள தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தவறான செயற்பாடுகளினால் நாட்டை மூடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளில் 80% சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் 15.8% ஆன தொற்றாளர்கள் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதனை விட ஐந்து மடங்கு தொற்றாளர்கள் நாட்டில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களை இனங்காணாது இருப்பதன் காரணமாக 5% இற்கும் குறைவானோருக்கு மருத்துவ உதவிகளின்றி மரணிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

தொற்றுநோயியல் நிபுணர்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதியை தவறாக வழிநடத்துவதாகத் தெரிகிறது, சுகாதார அமைச்சின் தவறான கொள்கைகளால் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அரசாங்கத்தால் சமாளிக்க முடியாது என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.