கொரோனா சடலங்களை தகனம் செய்ய போதுமான இடமில்லை - பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா சடலங்களை தகனம் செய்ய போதுமான இடமில்லை - பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பதுளை மாவட்டத்தில் தகனம் செய்யுமிடத்தில் போதுமான இடம் இல்லை என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்ட சங்கத் தலைவர் ஆர். திஸாநாயக்க கூறுகையில், மாவட்டத்தில் மரணங்களை தகனம் செய்யும் 09 இடங்கள் காணப்படுகின்றன. அவை கொரானா உடல்களை எரிக்கப் பயன்படுகின்றன, அவற்றில் ஒரு நாளைக்கு 27 மரணங்களே தகனம் செய்ய முடியும். 

கொரானா அல்லாத இறப்புகளும் தகனம் செய்யப்படுவதினால், தகனம் செய்யும் இடத்தில் கொரோனா மரணங்களை தகனம் செய்ய போதுமான இடம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, இந்த கால கட்டத்தில் கொரொனா அல்லாத சடலங்களை தகனம் செய்வதைத் தடுக்கவும், அவர்களை அடக்கம் செய்ய உறவினர்களுக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.