
பதுளை மாவட்ட சங்கத் தலைவர் ஆர். திஸாநாயக்க கூறுகையில், மாவட்டத்தில் மரணங்களை தகனம் செய்யும் 09 இடங்கள் காணப்படுகின்றன. அவை கொரானா உடல்களை எரிக்கப் பயன்படுகின்றன, அவற்றில் ஒரு நாளைக்கு 27 மரணங்களே தகனம் செய்ய முடியும்.
கொரானா அல்லாத இறப்புகளும் தகனம் செய்யப்படுவதினால், தகனம் செய்யும் இடத்தில் கொரோனா மரணங்களை தகனம் செய்ய போதுமான இடம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, இந்த கால கட்டத்தில் கொரொனா அல்லாத சடலங்களை தகனம் செய்வதைத் தடுக்கவும், அவர்களை அடக்கம் செய்ய உறவினர்களுக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)