இன்று (10) நள்ளிரவு முதல் திருமண வைபவமொன்றில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அத்தியாவசிய கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும் எனவும் கொரொனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.