கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மையவாடியில் இடப்பற்றாக்குறை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மையவாடியில் இடப்பற்றாக்குறை!!

மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட இடம் பூர்த்தியடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 300 உடல்களை மாத்திரமே அந்த இடத்தில் அடக்கம் என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் அன்வர் ஹம்தானி கூறினார்.

இதன் விளைவாக, அம்பாறை மாவட்டத்தில் மற்றொரு இடம் கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதிய தளம் மூன்று ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளதோடு சுமார் 2,400 உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

ஒட்டமாவடி கல்லறையில் இதுவரை 1470 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவு,, அவற்றில் 1383 முஸ்லிம்கள் எனவும் மற்றவை பிற மதத்தினர் என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.