மறைக்க வேறொன்றும் இல்லை - இலங்கை ஆபத்தை நோக்கி நகர்கின்றது!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மறைக்க வேறொன்றும் இல்லை - இலங்கை ஆபத்தை நோக்கி நகர்கின்றது!!!!

டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இதில் மறைக்க ஒன்றுமில்லை.

அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை. அதிக நோயாளிகள் அறிவிக்கப்படும் காலம் வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

எனவே அத்தியாவசிய தேவைகளைத் தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அப்படி வெளியே வரும்போது வைரஸ் பரவும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெல்டா வகை இப்போது நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.

தினமும் ஏராளமானோர் நோய்வாய்ப்படுவதுடன் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

இந்த வைரஸ் மிகவும் தீவிரமானது. இது உடலில் ஒட்டிக்கொள்ளவும், நுரையீரலை சேதப்படுத்தவும், உடலை சேதப்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது என்று அமைச்சர் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.