தனியார் மருத்துவ நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிசிஆர்
பரிசோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பிசிஆர் பரிசோதனைக்கு அதிகபட்ச விலையாக 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் மாத்திரமே அறவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.