அனைத்து மக்களும் உடனடியாக கொரோனா தடுப்பூசியைப் பெற வேண்டும் அல்லது அத்தியாவசியமற்ற ஒன்றிற்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசாங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவுறுத்துகிறது.
நாட்டில் சுமார் 1.5% தொற்றாளர்கள் பலியாகுவதாகவும், பெரும்பாலானோர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தகவல் இயக்குநர் ஜெனரல் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசு தகவல் இயக்குநர் ஜெனரல் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- அனைவரும் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுங்கள் - உலகம் முழுவதும் பெருமாலானோர் உயிர்த்தப்பியது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதால் ஆகும்.
- அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டை விட்டு வெளியே செல்லவும்.
- மக்கள் ஒன்று கூடும் திருமண நிகழ்வு, மரண நிகழ்வு மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்.
- பொது இடங்களுக்கு செல்கையில் முகக்கவசம் அணியுங்கள்.
- அறைகள், மண்டபம், லிஃப்ட், வாகனம் போன்ற மூடப்பட இடங்களில் மக்கள் கூட்டத்தில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
- அடிக்கடி சவர்க்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
- இனம் தெரியாதவர்களிடமிருந்து இரு மீட்டர்கள் இடைவெளியினை பேணுங்கள்.
- நெடுநாள் நோய்கள் இருப்பின் வீட்டில் இருந்து வெளியே செல்லாதீர்கள்.
- உங்கள் மற்றும் உங்கள் உறவினர்களின் உயிரை காக்க நீங்களை பொறுப்புதாரராய் இருங்கள்.
(யாழ் நியூஸ்)