ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோரில், 62 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும், வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும், கடந்த காலங்களில் அம்பாறை காத்தான்குடி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேகநபர்களதும், விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை , உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்களை பார்வையிடுவதற்காக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நீதிமன்ற வாசலில் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.