நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்களின் விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்களின் விபரம் வெளியானது!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் (23) மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


113 ஆண்களும் 77 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 38 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குட்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.


அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை  7,750 பேர் உயிரிழந்துள்ளனர்.


நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதி செழியப்பட்டுள்ளனர் என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,386 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 346,767 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 43,597 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.