அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறுவதில் கடினப்படும் உலகில் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை - சந்திம வீரக்கொடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறுவதில் கடினப்படும் உலகில் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை - சந்திம வீரக்கொடி

அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பெறுவதில் கடினப்படும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது என்றும், உலக உணவு பற்றாக்குறை இருந்த போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது 'அபி வவமு ரட நகமு' போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்ட போதிலும், இன்று மக்கள் பட்டினியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் குறித்து கலந்துரையாட கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மட்டும் தான் அழைத்திருப்பதாகவும், அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

அக்மீமன பிரதேசத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.