கொரோனா தொற்றினால் உயிரிழப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் சவச்சாலைகளில் உடல்கள் குவிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் கொழும்பு பொலிஸ் சவச்சாலையில் காணப்படுகிற தற்போதைய நிலைமை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.