பால்மா இறக்குமதியாளர்களின் புதிய கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால்மா இறக்குமதியாளர்களின் புதிய கோரிக்கை!

ஒரு கிலோவுக்கு ஆகக் குறைந்தது 260 ரூபாய் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக, அவர்கள் ஒரு கிலோவுக்கு 350 ரூபாய் விலை உயர்வை நாடினர்.

மேலும், இறக்குமதியாளர்கள் சுங்க வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரிகளை அரசாங்கம் தள்ளுபடி செய்ய முன்வந்ததை வரவேற்றனர்.

இருப்பினும், வரி விலக்கின் தாக்கம் ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் மட்டுமே இலாபம் இருக்கும் என ஒரு தொழில்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உலக சந்தையில், பால்மா விலை ஒரு டன் 4,300 அமெரிக்க டொலராக இருந்தது. இப்போது 3,800 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் எங்களால் இலாபம் ஈட்ட முடியாது.

வரிச்சலுகையை தள்ளுபடி செய்வதன் மூலமும், உலகச் சந்தையில் விலை வீழ்ச்சியின் மூலமும், பால்மா விலையை இன்னும் 260 ரூபாய் உயர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்..

இதற்கிடையில், மில்கோ (PVT) லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் லசந்த விக்ரமசிங்க தெரிவிக்கையில்,

உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும் புதிய பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் இலங்கைக்கு இது சிறந்த வாய்ப்பாகும் என்றார்.

அத்தியாவசிய உணவுப் பொருளான பால்மா மீதான கட்டுப்படுத்தப்பட்ட விலையை நீக்க வேண்டும். அதன்பின், உள்ளூர் பால் பண்ணையாளர்களுக்கு நியாயமான விலையை நாங்கள் வழங்க முடியும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.