எவர்களுக்கு எல்லாம் மாகாண எல்லைகளை கடக்க அனுமதி? வெளியான புதிய அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எவர்களுக்கு எல்லாம் மாகாண எல்லைகளை கடக்க அனுமதி? வெளியான புதிய அறிக்கை!

அத்தியாவசிய சேவைகள் துறையின் ஏழு பிரிவுகளின் ஊழியர்களுக்கு மட்டுமே மாகாண எல்லைகள் கடக்க அனுமதியளிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்..

மேலும் இந்த கொரோனா குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

கீழ் காணும் அத்தியாவசிய சேவைகளின் ஏழு துறையினருக்கே மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படும்:

1. சுகாதார சேவைகள்
2. காவல்துறை மற்றும் முப்படைகள்
3. அத்தியாவசிய அதிகாரப்பூர்வ அரச துறை அதிகாரிகள்
4. அத்தியாவசிய பொருட்களின் விநியோகஸ்தர்கள்
5. அத்தியாவசிய சேவைகளை வழங்குநர்கள் - பயன்பாட்டு சேவைகள் போன்றவை
6. நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணம் (ஆதாரம் தேவை)
6. துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் இருந்து சரக்கு எடுத்து செல்லல் மற்றும் வருகை (ஆதாரம் தேவை)

தனிமைப்படுத்தலில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் அத்தியாவசிய சேவைத் தொழிலாளர்கள்
அங்கிருந்து உடல்ரீதியாக வேலைக்கு செல்வதை இருந்து கட்டாயம் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அனுமதிக்கப்படாது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.