கொரோனா தொற்றுக்கு இலக்காகி இரு கல்லூரி மாணவர்கள் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இரு கல்லூரி மாணவர்கள் பலி!

கொரோனா தொற்று காரணமாக 2 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இசிப்பத்தான கல்லுரியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரும் கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவி ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசிப்பத்தான கல்லுரியைச் சேர்ந்த சமித்த டில்துஷான், களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஆகஸ்ட் 14 ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமித்த டில்துஷான், மேலதிக சிகிச்சைகளுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கொரோனா தொற்றின் வீரியத்தன்மையினை கருத்தில் கொண்டு பொது மக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் டெல்டா தாக்கம் அதிகமாகியிருப்பதாகவும், இது பெரும் ஆபத்தாக மாறும் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.