திருகோணமலையில் 300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புகள் வழங்க ஏற்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருகோணமலையில் 300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புகள் வழங்க ஏற்பாடு!


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்டீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் ஆலோசனையின்படி சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின மக்களுக்கும் இந்த இலவசமான குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
 
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர் வழங்கல் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தலைமையில், குறுகிய காலத்துக்கள் இந்த குடிநீர் இணைப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலவச குடிநீர் இணைப்புகளை வழங்குவதற்கான ரூபா 49 இலட்சம் பெறுமதியான காசோலையினை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்டீனால் திருகோணமலை மாவட்ட நீர் வழங்கல் காரியாலயத்தில் கணக்காளரான நிஜாமுதீனிடம் நேற்றுமுன்தினம் (26) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. இவர்களுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைப்பாளர் ராசிக் றியாஸ்டீன் தெரிவித்தார்.


-எம்.எஸ்.எம்.ஸாகிர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.