திருமண வைபவங்கள் நடாத்த மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான அனுமதி தொடர்பான சுகாதார வழிக்காட்டுதல்கள் விரைவில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண வைபவங்கள் நடாத்த மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான அனுமதி தொடர்பான சுகாதார வழிக்காட்டுதல்கள் விரைவில்!

கொரோனா குறித்த திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் புதிய தொகுப்பு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அவர்களால் வெளியிடப்பட உள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்கள் பல திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்கும் எனவும், பல கட்டுப்பாடுகளை நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில்  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை திருமண வைபவங்களில் கலந்து கொள்ள அனுமதிப்பது போன்ற புதிய விதிமுறைகளைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.  தற்போதைய வழிகாட்டுதல்களின் கீழ் இவைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சுகாதார வழிகாட்டுதல்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன், மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.