எதிர்வரும் நீண்ட வார இறுதியில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் பொலிசார் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர (டிஐஜி) அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் முகக்கவசங்களை அணியத் தவறிய அல்லது சமூக இடைவெளியை பராமரிக்கத் தவறிய நபர்கள் என தெரிவித்தார்.

கடந்த பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாகாண எல்லைகளை கடக்க முயன்ற பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.