ஆர்ப்பாட்டம் செய்யும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு - ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால் தனக்கான ஆடைகளை எடுத்து வருமாறு அரசு தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்ப்பாட்டம் செய்யும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு - ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால் தனக்கான ஆடைகளை எடுத்து வருமாறு அரசு தெரிவிப்பு!

கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபட முயற்சிக்கும் இக்காலகட்டத்தில் மக்கள் போராட்டங்களில் ஈடுபவது மீண்டுமொரு கொரோனா தீவிரப்பரவலுக்கு காரணமாக அமையும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எவரேனும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வருவார்கள் என்றால், தமக்கான ஆடைகளுடன் தனிமைப்படுத்தலுக்கும் செல்ல தயாராக வருமாறு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இது ஒருபோதும் அரசுக்கான அச்சுறுத்தல் அல்ல, ஆனால் மக்கள் மீதான அன்பினால் செய்யப்பட்ட கோரிக்கை என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.