பிரதமருக்கு வந்த கடிதம் - தீரிவு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமருக்கு வந்த கடிதம் - தீரிவு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்!

கல்வி சாரா ஊழியர்கள் சங்கத்தினர், இரண்டு வாரங்களுக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வை அரசாங்கம் வழங்கத் தவறும் பட்சத்தில் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் தீவிர தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளதாக பிரதமர் மஹிந்தவிற்கு அறிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(26) எழுத்துபூர்வமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தேசிய பாடசாலைகளில் பணிபுரியும் கல்வி சாரா ஊழியர்கள் மாகாண சபை பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பெறும் அதே சலுகைகளை இழந்து விட்டதாகவும் இவ்விவகாரம் குறித்து 8 ஆண்டுகளுக்கு முன் ஆளுநர்களுக்கும் நிர்வாக சேவைத் திணைக்களத்துக்கும் கடிதம் எழுதியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உடனடித் தீர்வு எடுக்கா விட்டால் 30ஆயிரம் கல்வி சாரா ஊழியர்களுடன் தீவிர போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என பிரதமருக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.