ரிஷாத் பதியுத்தீன் வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் நீதவான் பிறப்பித்த கட்டளைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாத் பதியுத்தீன் வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் நீதவான் பிறப்பித்த கட்டளைகள்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி ரிசாத் பதியுதீனின் மனைவி, அவரின் மாமா மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்களை பொலிஸாருக்கு சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய நேற்று (19) உத்தரவிட்டார்.

உயிரிழந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காலத்தை கண்டுபிடிக்க பொரளை பொலிஸார் ஒரு கடிதத்தின் மூலம் கோரியதை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், இந்த சிறுமியை அழைத்து வந்த நபரின் வங்கி கணக்கு பதிவுகளை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தொடர்புடைய வங்கிகளுக்கும் நீதவான் உத்தரவிட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.