VIDEO: பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு செய்த 25 வயதுடைய இளைஞன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு செய்த 25 வயதுடைய இளைஞன் கைது!

வவுனியா உள்ள சாந்தசோலை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் (பி.எச்.ஐ) ஒருவரை திட்டிய 25 வயதுடைய நபரை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது முகக்கவசம் இன்றி சென்றமையால் குறித்த நபரை விசாரித்த பி.எச்.ஐ அதிகாரியை சந்தேக நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

காயமடைந்த பி.எச்.ஐ அதிகாரி வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

அட்டுலுகம பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவம் ஒன்றிற்காக குறித்த குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சுகாதார ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி அஜித் ரோஹன எச்சரித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.