தலைமறைவாகியுள்ள 24 இலங்கையர்களுக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலைமறைவாகியுள்ள 24 இலங்கையர்களுக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை!


போதைப்பொருள் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நிலையில்  வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள  24  சந்தேக நபர்களுக்கு எதிராக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய 13 பேர் அடங்கலாக பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இவர்களில் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய  இரண்டு சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் அனைவரையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.