வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் இல்லை? புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் இல்லை? புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியானது!


இலங்கை சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பொருந்தக்கூடிய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட (இரண்டு டோஸ்) இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வீடுகளில் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்காவிலிருந்து வருகை மற்றும் பயண வரலாறு உள்ளவர்களுக்கு இந்த வீட்டு தனிமைப்படுத்தல் வசதி பொருந்தாது.

முழுமையாக தடுப்பூசி போடாமல் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களில் அல்லது அரச தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சுற்றுலா அடிப்படையில் பயோ பாதுகாப்பு (Bio Bubble) குமிழியின் கீழ் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த நடவடிக்கைகள் பொருந்தாது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.