ரணில் என்னை ஏமாற்றி விட்டார்! கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர் கவலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணில் என்னை ஏமாற்றி விட்டார்! கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர் கவலை!



தேசியப் பட்டியல் ஆசனத்தை தனக்குத் தருவதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தன்னை ஏமாற்றிவிட்டதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று (17) வழங்கிய தொலைபேசி ஊடான நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிட இருந்த நிலையில்தான் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசனத்தை தனக்கு வழங்குவதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளும்படி கோரியதாகவும், அதற்கமையவே தாம் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி தேர்தலில் தோல்வியடையும் உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கப்போவதில்லை என்ற முடிவினை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்திருந்தது. ஆனால் இன்று அந்த தீர்மானத்தை கட்சியின் தலைவவே மீறியிருப்பதாக ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.