நாட்டில் பொருட்களின் விலையில் சடுதியாக அதிகரிப்பு - புறக்கோட்டை வர்த்தககள் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பொருட்களின் விலையில் சடுதியாக அதிகரிப்பு - புறக்கோட்டை வர்த்தககள் தெரிவிப்பு!

கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

150 ரூபாவிற்கு இருந்த ஒரு கிலோகிராம் கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலைகள், தற்போது 200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்..

இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் காணப்படுகின்ற கறுவாடுகளுக்கான தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு ஆகியவற்றினாலேயே, விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை சந்தையில் 300 ரூபா முதல் 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் காணப்பட்ட ஒரு கிலோகிராம் பலயா கறுவாடு, 500 ரூபா முதல் 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, 250 ரூபா முதல் 300 ரூபா வரை காணப்பட்ட லீன்னா கறுவாடு, 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. 400 ரூபா முதல் 500 ரூபா வரை காணப்பட்ட ஈரான் காய்ந்த நெத்தலி ஒரு கிலோகிராமின் தற்போதைய விலை, 500 ரூபா முதல் 580 ரூபா வரை அதிகரித்துள்ளது.

அதேபோன்று, 400 ரூபா முதல் 500 ரூபா வரை காணப்பட்ட தாய்லாந்து நெத்தலி ஒரு கிலோகிராமின் தற்போதைய விலை, 600 ரூபா முதல் 650 ரூபா வரை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மொத்த விற்பனை விலைவில் கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளமையினால், அவற்றின் சில்லறை விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.