நாட்டில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழிமூலம் கற்க சந்தர்ப்பம் வழங்குவதற்கு எதிர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழிமூலம் கற்க சந்தர்ப்பம் வழங்குவதற்கு எதிர்ப்பு!


இலங்கை பாடசாலைகளில் ஆரம்ப கல்வியை ஆங்கிலம் மூலம் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா கூறியுள்ளமைக்கு சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


ஆங்கிலம் என்பது கௌரவம் என்ற தாழ்ந்த மனநிலையில் இருக்கும் கறுப்பு வெள்ளையர்கள் இப்படியான நடவடிக்கைகளை எடுப்பதாக சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.


இப்படியான நடவடிக்கைகளை C.W.W கன்னங்கர தனது சவக்குழியில் இருந்து சபிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.


தமது தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் பிள்ளைகளின் மனநிலை மேம்பட முக்கிய காரணமாக அமையும் என்பது தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைப்பாடாக உள்ளது. தாழ்ந்த மனநிலையில் இருக்கும் கறுப்பு வெள்ளையர்களுக்கு இவை பொருந்தாது.


ஆங்கில மொழியை எமது நாட்டு பிள்ளைகளுக்கு பலன்தரும் வகையில் கற்பிக்க தவறியுள்ள எமது கல்வி திணைக்களம், தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மூலம் ஆரம்ப கல்வியை வழங்க தயாராகி வருவது நேர்மையான மனநிலையில் அல்ல. இவர்கள் இலவச கல்வியில் படித்த நபர்கள் இல்லையா?.


கன்னங்கர அவர்கள் இவர்களை கல்லறையில் இருந்தவாறு சபிப்பார் என்பது நிச்சயம். பிள்ளைகள் மீதுள்ள அன்பால் இதனை செய்வதில்லை. இலவச கல்வியை அழிக்கும் எதிர்பார்ப்பில் இவர்கள் செயற்படுகின்றனர்.


ரணில் விக்ரமசிங்க கல்வியமைச்சராக இருந்த போது இப்படியான மிகப் பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முன்னர், மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஏற்படுத்தும் நோக்கில், வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அப்படி பார்க்கும் போது இவர்கள் ரணில் விக்ரமசிங்கவை விட தொலைவில் இருக்கின்றனர் எனவும் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.