பயணத்தடையை மீறுவோர் தனிமைப்படுத்தப்படுவர்! -பொலிஸ் மா அதிபர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணத்தடையை மீறுவோர் தனிமைப்படுத்தப்படுவர்! -பொலிஸ் மா அதிபர்


பயணத்தடையை மீறிச் செயற்படுவோர் தனிமைப்படுத்தப்படுவர் என பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.


நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடையை மீறி வீதிகளில் பயணிப்போரை கைது செய்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் இவ்வாறானவர்களை தனிமைப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக பயணிப்பவர்கள், அனுமதியின்றி பயணிப்பவர்கள் இவ்வாறு எதிர்வரும் நாட்களில் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.


பொலிஸாரினால் நபர்களை தனிமைப்படுத்த முடியாது எனவும், சுகாதார அதிகாரிகளே அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் குறித்த நபர்களை தனிமைப்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்க முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.