இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த ரோயல் பீராங்கி பிரிவில் பணியாற்றிய இராணுவ வீரர் இன்று காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த ரோயல் பீராங்கி பிரிவில் பணியாற்றிய இராணுவ வீரர் இன்று காலமானார்!

கடந்த 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரோயல் பிரிட்டிஸ் இராணுவத்தில் 2 ஆவது ரோயல் பீரங்கி படைப் பிரிவில் பணியாற்றிய இலங்கை வீரர் எஸ். டபிள்யூ. குணபால தனது 102 ஆவது வயதில் காலமானார்.

ரோயல் பிரிட்டிஷ் இராணுவத்தில் 410 ஆவது இலக்கத்தின் கீழ் கடமையாற்றிய எஸ். டபிள்யூ. குணபால, அம்பலாங்கொட அஹுங்கலவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று உயிரிழந்தார்.

எஸ். டபிள்யூ. குணபால 20.01.1943 முதல் 06.02.1945 வரையான காலப் பகுதியில் ரோயல் பிரிட்டிஷ் இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார்.

1939-1945 காலப்பகுதியில் இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் எஸ். டபிள்யூ. குணபாலவும் அப்போதைய இராணுவத்தில் பணியாற்றியதால், பிரிட்டிஷ் இராணுவம் மறைந்த குணபாலாவுக்கு, அவரது சேவைக்காக பாராட்டுக்குரிய விருதுகள் மற்றும் பாராட்டுக்களை வழங்கி கௌரவித்துள்ளது.

அவரது சடலம் அஹுங்கல்ல, தஹமதிஸ்ஸ மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில், அவர் தனது 102 ஆவது பிறந்த நாளை குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.