ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜப்தீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.


இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகக் கடந்த 10 வருடங்களிற்கு மேல் இவர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்சிக் காலத்தின் போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராகவும் பணியாற்றினார்.


இந்த நிலையில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையினாலேயே ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜப்தீன், தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.