தொற்று நோய்ப்பிரிவின் பிரதானியை அகரற்ற அரசு கவனம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொற்று நோய்ப்பிரிவின் பிரதானியை அகரற்ற அரசு கவனம்?


தொற்று நோய்ப் பிரிவின் பிரதானியை அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொற்று நோய்ப் பிரிவின் பிரதானியாக நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சுதத் சமரவீர கடமையாற்றி வருகின்றார்.


அவருக்கு பதிலீடாக வேறும் ஒர் தொற்றுநோயியில் நிபுணரை அந்தப் பதவியில் அமர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


டொக்டர் சுதத் சமரவீரவை அந்தப் பதவியிலிருந்து அகற்றினாலும் அவரது சேவை மூப்பினை கருத்திற் கொண்டு வேறு ஓர் பொருத்தமான பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் தொற்று நோய்ப் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மருத்துவதுறைசார் தரப்புக்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.