கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்களை சோதனையிடும் புதிய முறைமை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்களை சோதனையிடும் புதிய முறைமை!

கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்களில், ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று (02) முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிசை, வத்தளை போன்ற பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரு வாகனத்தை பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒரு பகுதியில் முழுமையாக சோதனைக்குபட்படுத்தப்படும் வாகனத்தில் ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்படவுள்ளது.



இன்று ஒட்டப்படும் ஸ்டிக்கரானது, இன்று மாத்திரமே செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளைய தினம் வேறொரு ஸ்டிக்கரை ஒட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.