மத குருமார்களுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித்தொகையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத குருமார்களுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித்தொகையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்!


பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைவாக பயணத்தடை காரணமாக வருமானம் இழந்த இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத குருமாரின் வருமானத்தில் தங்கி வாழ்கின்ற குடும்பங்களுக்கு 5,௦௦௦ ரூபா உதவித் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


அதற்கமைய பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரால் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதாரம், நுண்நிதிய, சுயதொழில் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில், கிராம அலுவலர்களிடமிருந்து இந்துக் குருமார்கள் தங்களது இந்துக்குருமார் அடையாள அட்டையை அல்லது ஆலய அறங்காவலரிடம் குருமார் என உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தைக் காண்பித்து 5,௦௦௦ ரூபா உதவித் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


எனவே வருமானம் இழந்த இந்துக் குருமார்கள் உரிய கிராம உத்தியோகத்தரை தொடர்புகொண்டு உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பிரதமரின் இந்துமத அலுவல்களுக்கான இணைப்புச் செயலார் சிவ ஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.