VIDEO: சீனாவின் பணயக்கைதியாக மாறப்போகும் இலங்கை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: சீனாவின் பணயக்கைதியாக மாறப்போகும் இலங்கை?


நீருக்காக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.


போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ் மற்றும் கலாநிதி அன்டோனியா லுஷிகிவிக்ஸ் ஆகியோரினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


திபெத்திய பள்ளத்தாக்கிலிருந்து தொடங்கி பிரம்மபுத்ரா, இரவாடி மற்றும் மீகோம் நதிகளுக்கு குறுக்கே அணைகளைக் கட்டுவதன் மூலம் சீனா ஏற்கனவே தண்ணீரை சேகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவர்கள் விரும்பும் அளவுக்கு நீரை சேகரித்து, தேவைப்படும் போது நீரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விடுவிக்க முடியும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சீனாவின் இந்த திட்டத்தினால் குறித்த கங்கைகளின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நீர் தேவைப்பட்டால் அதனை சீனாவில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.


இந்த செயற்பாட்டினால் உலக சனத்தொகையில் அரைவாசி மக்கள் வாழும் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மக்கள் சீனாவின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் வௌியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செயன்முறை சீனாவின் ‘அச்சுறுத்தி நீரைப் பறிக்கும் பொறிமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கம்போடியா, வியட்னாம், லாவோஸ், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தற்போதும் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், இந்தியாவும் படிப்படியாக அந்தப் பொறிக்குள் சிக்கி வருகிறது.


இலங்கையும் படிப்படியாக சீனாவின் பொறிக்குள் சிக்கி வருகிறதா?


சிங்கராஜ வனம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுத்தமான நீர் நிலைகள் காணப்படுகின்மை அனைவருக்கும் தெரிந்த விடயம்.


சிங்கராஜ வனத்திலிருந்து ஊற்றெடுக்கும் பிரதான மூன்று கங்கைகளை மறித்து இரண்டு நீர்த்தேக்கங்களை அமைப்பதன் மூலம் சீனா சுத்தமான குடிநீரை தமது காட்டுப்பாட்டிற்குள் வைத்தருக்க முயற்சிக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது.


சிங்கராஜ வனத்தின் நீரேந்து பகுதி எமக்கு இல்லாமல் போனால், அதன் மூலம் அந்தப் பகுதியில் மாத்திரம் அல்ல, முழு நாட்டடிலும் நீர் மூலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.


நாம் தற்போது சீனாவின் மின்சாரப் பொறிக்கும் சிக்கியுள்ளோம்.


நாட்டில் மின்சார விநியோகத்தில் அதிகளவிலான பங்கை வகிக்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீனாவின் நிறுவனம் ஒன்றே அமைத்தது.


இன்றும் அதன் திருத்தப் பணிகள் மற்றும் செயற்படுத்தும் நடவடிக்கைகளை சீனாவே மேற்கொண்டு வருகின்றது.


பல சந்தர்ப்பங்களில் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகம் தடைப்பட்டதுடன், நிலக்கரி மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகும்.


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு விடுக்கும் அழுத்தம் தற்போது எம்மால் தடுக்க முடியாத நிலைமைக்கு வலுவடைந்துள்ளது, நீர் தொடர்பிலும் இந்த நிலை ஏற்படப் போகிறது.


நாட்டின் தேசிய அபிலாஷைகளை அடிப்படையாக வைத்தே இந்த செய்தி அறிக்கையிடபட்டுள்ளது.


சர்வதேச உறவுகள் தேவையென்ற போதிலும், அமெரிக்கா, சீனா, இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து இத்தகைய அழுத்தங்கள் வரும்போது, எமது நாட்டின் நலனை அடிப்படையாக வைத்து அறிக்கையிட நாம் எவ்வேளையிலும் கடமைப்பட்டுள்ளோம்!


-நியூஸ் பஸ்ட்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.